search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து தகராறு"

    • தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து பொங்கியண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் நம்பி யூர் அருகே உள்ள வெள்ளக் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொங்கி யண்ணன் (வயது 70). இவரது மகன் நாகராஜ் (42). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    நாகராஜ் தனது தந்தை யிடம் தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொங்கி யண்ணன் புஞ்சை புளிய ம்பட்டி அடுத்த காரப்பாடி யில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று அவருடன் தங்கி இருந்தார்.

    ஆனாலும் நாகராஜ் அங்கு சென்று தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் மீண்டும் காரப்பாடிக்கு சென்று அவரது தந்தை பொங்கியண்ணனை தாக்கி சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்தார்.

    இது குறித்து பொங்கிய ண்ணன் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர்கள் செந்தில்குமார், செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் தந்தையை கீழே தள்ளி கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவா் குப்பன் (வயது 70) தொழிலாளி. இவருக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். குப்பன் தனது குடும்ப சொத்தான 1½ ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் குப்பனின் 3-வது மகன் ஆறுமுகம் என்பவர் தனது குழந்தைகள் பெயரில் 50 சென்ட் நிலத்தை குப்பனிடம் இருந்து எழுதி வாங்கி கொண்டார்.

    இது பற்றி அறிந்த 2-வது மகன் சின்னவன் என்பவர் தனது தந்தை குப்பனிடம் சென்று ஆறுமுகத்தின் குழந்தைகளுக்கு சொத்து எழுதி கொடுத்தது பற்றி கேட்டு்ள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சின்னவன் தனது தந்தை குப்பனை தள்ளிவுள்ளார். இதில் மயக்கமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சின்னவன் தள்ளிவிட்டதில் குப்பன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    நாசரேத்தில் சொத்து தகராறில் தந்தையை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    நாசரேத்:

    நாசரேத் ஏதேன் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 84). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஜோசப் எட்வர்டுராஜ் (வயது 50) டிரைவர். இவருக்கு திருமணமாகி தூத்துக்குடி பிறமுத்துவிளையில் தனியாக வசித்து வருகிறார். இவர் தந்தை வீட்டிற்கு அடிக்கடி சென்று சொத்தை பிரித்து தருமாறு கேட்டு வந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று ஜோசப் எட்வர்டுராஜ் நாசரேத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜோசப் எட்வர்டுராஜ், செல்லத்துரையை  அடித்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து புகாரின் பேரில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ஜோசப் எட்வர்டுராஜை கைது செய்தார்.
    ×